Skip to content
Home » தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலைச் சேர்ந்தவர் செந்தில்.  இவரது உறவினர்  ஜெயக்குமார்(50),  விவசாயி, இறால் பண்ணையும் நடத்தி வந்தார்.  ஒரு வாரத்திற்கு முன்பு செந்திலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.
இது குறித்து அய்யம்பேட்டை போலீசில் செந்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது..இதுகுறித்து அறிந்த ஜெயக்குமார் தனது நண்பர் காட்டுக்குறிச்சி  அன்பரசு என்பவரின் மகன் பிரவீன் மற்றும் செந்திலையும் அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றார்.

அங்கு அய்யம்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்குமாறு கூறினார்களாம்.
இதையடுத்து, ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோர் அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பசுபதி கோயில் பகுதியில் சிலர் காரை வழிமறித்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகிய மூன்று பேரையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் படு காயமடைந்த ஜெயக்குமார், பிரவீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு  ஜெயக்குமார் பரிதாபமாக இருந்தார். பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!