Skip to content
Home » தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

தஞ்சை மாவட்டம் சானூரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன்( 27). இவர் தனது உறவினர் சுரேந்தர் (23) மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரில்  மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தஞ்சை கீழவாசல் மற்றும் தெற்கலங்கம் பகுதியை 3 பேர்  வந்து ஹரிஹரனிடம் மதுபானம் குடிக்க பிளாஸ்டிக் கப் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் இரு தரப்பினரும்  கடுமையாக  தாக்கிக்கொண்டனர்.   இதில் படுகாயமடைந்த ஹரிஹரன்  சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து3பேரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!