Skip to content
Home » தமிழகத்தில் “வெப்ப அலை” எச்சரிக்கை…

தமிழகத்தில் “வெப்ப அலை” எச்சரிக்கை…

  • by Senthil

தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தினம் எச்சரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு… “இன்று முதல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கக் கூடும். இதர தமிழக மாவட்ட சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஏப். 26-ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 35 சதவீதம் ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக் கூடும்.  இதனால் பொதுமக்களுக்கு சில இடங்களில் அசகவுரியங்கள் ஏற்படலாம். வெப்ப அலையை பொறுத்தவரையில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!