கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மக்கினாம்பட்டி ஊராட்சியில் மாரியம்மாள் அழகிரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்,மின்சார வசதி,சாலை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது, தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும்,வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்காமல் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தடுக்கும் விதமாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும்
தமிழக முதல்வர் கொண்டு வந்த அரசு பள்ளிகளின் காலை உணவு திட்டம் பொது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது, மாக்கினாம் பட்டி ஊராட்சி பகுதியில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை உணவு திட்டத்துக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பவேண்டும் என வலியுருத்தப்பட்டது, மாக்கினாம்பட்டி ஊராட்சி பகுதியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் கௌரிக்கப்பட்டனர், இதில் துணை தலைவர் அழகிரி ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.