Skip to content
Home » தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Senthil

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை கரையில் நிற்குமாறு கூறிவிட்டு ஆற்றுக்குள் இறங்கி அன்பழகன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அன்பழகன் மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹர்ஷவர்தன் கத்தி அலறி உள்ளான். தொடர்ந்து வீட்டிற்கு ஓடி சென்று தன் தாய் இலக்கியாவிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளான். உடன் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இலக்கியாவும் சம்பவ இடத்திற்கு சென்றார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அன்பழகன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அன்பழகனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!