Skip to content
Home » தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டியில், தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் வல்லம் – ஒரத்தநாடு செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன் ஜார்ஜ் (25) தஞ்சாவூர் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார்.

திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதிக்கு வந்தபோது வல்லத்திலிருந்து வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக்கும்- ஜார்ஜ் ஓட்டி வந்த காரும் மோதிக் கொண்டன. இதில் நிலைதடுமாறி இரு வாகனங்களும் சாலையை விட்டு இறங்கி அருகில் இருந்த வடிகால்

வாய்க்கால் சரிந்து விழுந்தது. இதில் பைக்கில் வந்த வாலிபருக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டது. உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே பகுதியில்தான் கடந்த 1ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு பஸ்சும் அதிராம்பட்டினத்தில் இருந்து வல்லம் நோக்கி சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் மினி லாரியும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நால்ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நான்கு புறத்தில் இருந்தும் வரும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமல் வந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!