Skip to content
Home » தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசமான நிலையில் செல்கிறது ஆலையில் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகிற சர்க்கரை துறை ஆணையரையும் ஆலை தலைமை நிர்வாகியையும் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் மேகதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு துணை போவதை வன்மையாக கண்டிக்கிறோம். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்கப்பட வேண்டும்.டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகளை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது, விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டத்தை ஒன்றிய அரசு உடன் ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் மற்றும் கல்வி உரிமை சட்டம் போன்ற பல அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் திருப்பதி, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!