Skip to content
Home » தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் ஒன்றியம் வடகால் ஊராட்சி வெண்ணலோடையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார் .

பின்னர் தஞ்சாவூர் ஒன்றியம் வடகால் ஊராட்சியில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், வடகால் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் கல்வித் தரும் குறித்தும் ஆய்வு செய்து. வடகால் ஊராட்சியில் உள்ள

ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கல் இடமாற்றம் மற்றும் திருத்தம் தொடர்பாக நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) ரேணுகோபால், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் அருள்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!