Skip to content
Home » தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Senthil

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி வீரர்களும் திருப்பி வாசித்தனர்.

தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 700 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 375 போ் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் 4 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனா். வீரா்கள் கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவுக்குத் தேங்காய் நாா் போடப்பட்டு இருந்தது.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, சில்வா் பாத்திரம், குத்துவிளக்கு, மின் விசிறி, கட்டில், நாற்காலி போன்ற பல பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் பிடிக்க முடியாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, மாடு பிடி வீரா்களைச் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவா்கள் மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனா். இதேபோல, மாடுகளை கால்நடைப் பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் வல்லம் டி.எஸ்.பி., நித்யா தலைமையில் 300க்கும் அதிகமான போலீசார் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!