Skip to content
Home » தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் பகுதியில் சரவணன் (52) என்பவர் கடந்த 2 மாதங்களாக மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார். இங்கு 9 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் திலகம் தலைமையில் அதிகாரிகள் இந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு அனுமதி பெறாமல் மையம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் மகன் மணி (30) என்பவர் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரவணன், அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நப்ரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!