Skip to content
Home » தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

  • by Senthil

தஞ்சை வில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ஆண்டனி வயது 25. பட்டுக்கோட்டை தாலுகா சூரபள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 26. மதுரை மாவட்டம் அனுப்ப பாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அரிமுருகன் இவர்கள் மூன்று பேரும் கஞ்சா வியாபாரிகள். இவர்கள் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் கும்பகோணம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுகந்தி குண்டர் சட்டத்தில் ஆண்டனி, கார்த்திகேயன், ஹரி முருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!