Skip to content
Home » தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Senthil

பாஜக கூட்டத்தில் திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பூ ‘தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொாடுத்தா, பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்களா என்று பேசினார். இந்த பேச்சிற்கு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தொடர்ந்து இந்த பேச்சுக்கு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி தமிழக முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் குஷ்ப உருவ பொம்மை எரிப்பு போன்றவை நடந்தன. அந்த வகையில்

தஞ்சை கீழவாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில
மகளிர் அணி ஆலோசனை குழு தலைவர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார்.

மகளிர் அணி அமைப்பாளர் ரமணி சுப்பிரமணியன், தொண்டரணி அமைப்பாளர் கமலா ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் தஞ்சாவூர் எம் பி எஸ் எஸ் பழனிமாணிக்கம், திருவையாறு எம் எல் ஏ துரை. சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுபத்ரா, மகளிர் அணி நிர்வாகிகள் தமிழரசி ராஜா, ரம்யா சரவணன், சசிகலா பிரேம், இந்திரா, மல்லிகா கபிலன், சுப்புலட்சுமி கண்ணன், செண்பகவல்லி, சகாயமேரி, சுபா, மோகனாம்பாள் ஆக்னஸ் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் குஷ்பூ உருவப்படத்தை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!