Skip to content
Home » தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம் தேதி காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு தனது கணவர் ஷேக் தாவூதிற்கு தகவல் அளித்தார்.

இது குறித்து ஷேக்தாவூத் வல்லம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வல்லம் பகுதியில் சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அந்த சிறுவன் பாபநாசம் அருகே மேலகபிஸ்தலம் செங்குட்டுவன் என்பவரின் மகன் என்று தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஷேக் தாவூத் வீட்டில் புகுந்து பணத்தை திருடியது அந்த சிறுவன் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவன் மீது பாபநாசம், அரியலூர், கல்லக்குடி, கீழப்பழுவூர், திருமானூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!