தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தும் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி நன்றி தெரிவித்தனர். நெகிழ்ச்சியான இந்த சந்திப்பு குறித்து பழைய மாணவர்கள் தரப்பில் கூறுகையில், சொல்ல வார்த்தைகளே இல்லை. நாங்கள் படித்த அந்த நாட்கள் நினைவில் வந்து சென்றது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தனர்.