Skip to content
Home » தஞ்சை அருகே பழுதடைந்துள்ள மின்மாற்றி ….. பொதுமக்கள் அச்சம்….

தஞ்சை அருகே பழுதடைந்துள்ள மின்மாற்றி ….. பொதுமக்கள் அச்சம்….

தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் வல்லம் பஸ் ஸ்டாண்ட் வந்து தஞ்சை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

வல்லம் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி அரசு பள்ளிகள், போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வல்லம் வந்து செல்கின்றனர். இதனால் வல்லத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

மேலும் திருச்சி உட்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்களும் சென்று வருகின்றன. வல்லத்தை சேர்ந்த மாணவர்கள் தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்கின்றனர். இதனால் எப்போதும் வல்லத்தில்

போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் வல்லத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வல்லத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்படுகிறது. மேலும் மழை நீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இதற்காக சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் தஞ்சை – திருச்சி சாலை வல்லத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வாசலில் சிமெண்டால் அமைக்கப்பட்ட மிக பழமையான மின்மாற்றி உள்ளது. இதில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டும் போது இந்த மின்மாற்றி பாதிக்கப்படலாம் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்மாற்றியை முறையாக அகற்றி புதிதாக வைத்துவிட்டு பின்னர் சாலைப்பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!