Skip to content
Home » தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை தடுக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார் உத்தரவின் பேரில் திருச்சி எஸ்.பி., சுஜாதா மேற்பார்வையில் தஞ்சை டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாக கொள்முதல் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது

இந்நிலையில் நேற்று தஞ்சை- புதுக்கோட்டை மாவட்ட எல்லையான அற்புதாபுரம், திருக்கானூர்பட்டி மற்றும் வல்லம் பகுதிகளில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறா? என சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!