Skip to content
Home » தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Senthil

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர்பட்டியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ், ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் அமுதா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுரேசிற்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேசை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகன் கண் எதிரேயே தாய் பரிதாபமாக பலியான சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!