Skip to content
Home » சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அழகுமணி (57). கணவரால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் எனது கணவரை பிரிந்து எனது தாயார் மீனாட்சி வீட்டில் வசித்து வந்தேன். எனது சகோதரர் என்னையும், எனது தாயாரையும் கொடுமைப்படுத்தினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். மேலும் எனது தாயாரையும் அவரோடு அழைத்து சென்றுவிட்டார். எனது தாயார் அப்பாவி. அவர் மாதம் ரூ.35 ஆயிரம் ஓய்வூதியம் வாங்குகிறார். எனது சகோதரர் நாங்கள் வசித்து வந்த வீட்டினையும் அபகரித்து விட்டார். இப்போது நான் தோழியின் வீட்டில் தங்கி இருக்கிறேன். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது தாயை மீட்டுத்தர வேண்டும் என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!