Skip to content
Home » தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் வயல்கள் நிறைந்த பகுதியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இன்று மதியம் இக்கோயில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த முருகன் என்பவர் தனது பேரனுடன் கோயில் நோக்கி வந்துள்ளார். அங்கு 3 பேர் கோயில் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தது சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த 3 பேரும் முருகனையும், அவரது பேரனையும் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட ஆரம்பித்தனர். இதற்கிடையில் முருகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் 3 பேர் ஓடுவதை கண்டு அவர்களை துரத்தி சென்றுள்ளனர். இதில் ஒரு வாலிபர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டனர். சிக்கிக் கொண்ட அந்த வாலிபரை பொதுமக்கள் செம கவனிப்பு கவனித்து விசாரித்துள்ளனர். இதில் அவர் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் நகரைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பதும், கோயிலில் சுவாமி சிலையை திருட 2 பேருடன் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அரவிந்தை கிராம மக்கள் தஞ்சாவூர் தாலுகா போலீசில் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!