Skip to content
Home » தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் கார்- லாரி மோதி விபத்து… 2 பேர் பலி….

தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் கார்- லாரி மோதி விபத்து… 2 பேர் பலி….

  • by Senthil

காரைக்காலில் இருந்து கொச்சிக்கு மீன் ஏற்றிக்கொண்டு இன்று காலை வேன் ஒன்று தஞ்சை – திருச்சி நெடுஞ்சாலையில் சாஸ்திர பல்கலைக்கழகம் அருகில் சென்று கொண்டிருந்தது. வேனை காரைக்காலைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (35)என்பவர் ஓட்டி வந்தார். வேனில் காரைக்காலை சேர்ந்த மீன் டீலர் மேத்யூ (22) என்பவரும் உடன் இருந்தார்.

இந்நிலையில் தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்த கிருபாகரன் பொன் செழியன் (34) என்பவர் திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கார் எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்புச் சுவரில் மோதி எதிர்திசையில் வந்த மீன் லாரி மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே கிருபாகரன் பொன் செழியன் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் வேன் டிரைவர் நெடுஞ்செழியன் மற்றும் மீன் டீலர் மேத்யூ ஆகிய இருவரும் படுக்காயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் வேன் டிரைவர் நெடுஞ்செழியன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த  கோர விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!