தஞ்சை அருகே வல்லம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 16ம் தேதி மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருமலைசமுத்திரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வல்லம்புதூர், மொனையம்பட்டி,குருவாடிபட்டி நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி. ராயராம்பட்டி, சாணுரப்பட்டி ஆச்சம்பட்டிபாளையப்பட்டி, அள்ளூர், அளிச்குடி. அம்மையகரம் தென்னகுடி, பிள்ளையார்நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் 16ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.