Skip to content
Home » தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. 3 மீட்டர் அகலத்தில் 1.33 கி.மீட்டர் நீளத்தில் ௹ 30 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கப் பட்டது. உதார மங்களம் மெயின் சாலையான இது குடியானத் தெரு, வடக்குத் தெரு, தெற்கு தெரு, எடக்குடியை இணைக்கின்ற இணைப்புச் சாலையாகும். 10 வருடத்திற்கு பின் போடப் பட்ட இந்தச் சாலையை ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!