சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியின் மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் ராஜகோபுரம் அழகை ரசித்து அதன் முன்பு நின்று சுற்றுலா பயணிகள்புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில்

கேரளாந்தகன் நுழைவு வாயில் மற்றும் மதில் சுவர்கள் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.
ராஜகோபுரங்கள் மற்றும் விமானம் கோபுரம் தங்க நிறத்தில் மின்னுகிறது.
அதோடு இரண்டாவது நுழைவு வாயில் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் ஜொலித்து அழகாக காட்சி அளித்தது. இதனை ரசித்து கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கோபுரம் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
