Skip to content
Home » பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அடுத்த  எசனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). இவர் கார்பெண்டர் வேலை செய்து  வந்தார். இவர் கடந்த 19ம்தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு பின்னர் தனது மனைவியுடன்  நேற்று மாலை 5மணியளவில்  வீட்டிற்கு திரும்பினார்  . அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.   உள்ளே  சென்று பார்த்தபோது இரும்பு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம்  ரொக்கம்  திருட்டு போயிருப்பது தெரியவந்தது வந்தது.

தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!