Skip to content
Home » திருட போன இடத்தில் தூங்கிய திருடன்….

திருட போன இடத்தில் தூங்கிய திருடன்….

  • by Senthil

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ரவி என்ற நபர் செவ்வாய்க்கிழமை இரவு தனது ஈகோ மாடல் காரை  வீட்டு முன்  நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். நேற்று  காலையில் காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர், காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். காரைத் திருட வந்த அந்த நபர் போதையில்  இருந்ததால் காருக்குள் படுத்து தூங்கி விட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!