உட்கட்சி பிரச்சினை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இன்று அதிகாலை நான்கு மணிக்கு கோயிலுக்கு வந்து விட்ட அவர் கோயிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற முதல் கால பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆகியவற்றில் பங்கேற்று தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
