Skip to content
Home » திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

  • by Senthil

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி இருசக்கர வாகனத்தையும், அவரிடம் இருந்த பணத்தையும் பிடுங்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காந்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் வழிப்பறி செய்த திருவரங்கம் சிங்கர்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!