திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மாங்குடி, விளமல், வண்டாம்பாளையம், சேந்தமங்கலம், புலிவலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து இரண்டு மணி நேரமாக பெய்து வருகிறது.
இந்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலில் கடும் அவதிப்பட்ட பொதுமக்கள் தற்போது பெய்த திடீர் கனமழையின் காரணமாக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.