Skip to content
Home » தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

  • by Senthil

நாகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போர்க்கொடி. மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிப்பதில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் தொல்,திருமாவளவன் அறிவித்துள்ளார்.அதன்படி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக நாக-அருட்செல்வன் என்பவரை நியமித்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட நாக,அருள்செல்வனுக்கு அக்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து இன்று நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பாலக்காடு கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர், மாவட்டச் செயலாளரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது களத்தில் பணியாற்றும் சரியான நபரை தேர்ந்தெடுத்து மாவட்ட செயலாளராக ஆக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அக்கட்சியை விட்டு தாங்கள் வெளியேற போவதாக அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை கழகத்தால், மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நாகையில் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட நாக,அருள்செல்வனை உடனடியாக மாற்றக்கோரி நாகையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!