Skip to content
Home » சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன்  கோடை மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார் (47) என்ற விவசாயி தனது வீட்டின் அருகே பட்டுவளர்ச்சி துறையின் கீழ் மானியம் பெற்று ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டி பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீசிய சூறாவளி காற்றில் கட்டிடம் மற்றும் மேற்கூரை முழுமையாக சேதம் அடைந்தது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் அமைக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று அதே கிராமத்தை சேர்ந்த அபுசாலி என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம் பயிரிட்டு இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சோளப்பயிர் முழுமையாக சேதம் அடைந்தது. இதேபோல் மேலும் பல இடங்களில் சோளப்பயிர், எள் பயிர்கள் சேதம் அடைந்தன. 10 ஏக்கருக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டிருக்கும் என   விவசாயிகள் தெரிவித்தனர். சேதம் விவரங்களை வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!