Skip to content
Home » காதலிக்க மறுத்த +2 மாணவியை வெட்டிய வாலிபர்…. பரபரப்பு….

காதலிக்க மறுத்த +2 மாணவியை வெட்டிய வாலிபர்…. பரபரப்பு….

  • by Senthil

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் தங்கமாரி செக்காரக்குடியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தேர்வு எழுதி விட்டு வந்த மாணவி தங்கமாரியை பள்ளி அருகே வைத்து சோலையப்பன் மறைத்து வைத்திருந்த அறிவாளை கொண்டு தலையில் வெட்டி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தங்கமாரியை உடன் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் சோலையப்பனை தட்டப்பாறை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை இளைஞர் அறிவாளால் வெற்றியை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!