கேரளாவின் கோழிக்கோடு அருகே முக்காலி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்ததால் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இன்று காலை சுமார் 7.30 மணியளவில், கட்டுமானப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட லாரி கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு திசைகளிலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அருகிலிருந்த MEMU ரயில் பாதுகாப்பாக கடந்து சென்றது.
