2021 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மௌலானா, தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்கத் தவறியதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலின்போது அசன் மௌலானா ரூ.17.03 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்கு சமர்ப்பித்திருந்தார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அவர் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவுகள் 77, 78-ன் கீழ் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
