Skip to content
Home » படம் பிடிக்க அனுமதி மறுப்பு….. வாக்களிக்காமல் திரும்பிய மாஜி எம்.பி. குமார்

படம் பிடிக்க அனுமதி மறுப்பு….. வாக்களிக்காமல் திரும்பிய மாஜி எம்.பி. குமார்

  • by Senthil

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப. குமார் இன்று காலை  திருச்சி விமான நிலையம் அருகே  ஆல்பர்ட் மாஸ்டர் பள்ளி வாக்குச்சாவடிக்கு  வாக்களிக்க வந்தார்.  குமார் வாக்களிப்பதை புகைப்படம், மற்றும் வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர்  திரளாக வந்தனர்.

அப்போது  வாக்குச்சாவடி அதிகாரி , பத்திரிகையாளர்கள்  யாராவது ஒருவர் வந்து படம் பிடியுங்கள், அனைவரும் உள்ளே வரவேண்டாம்  என்றார். அதற்கு பத்திரிகையாளர்கள் எங்களுக்கு படம் பிடிக்க தேர்தல் கமிஷனின்

அனுமதி இருக்கிறது. எனவே அனைவரும் வருவோம் என்றனர். இதனால்  வாக்குச்சாவடி அதி்காரிக்கும்,  பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அறிந்த குமார்,  திமுகவினர் வந்தால் மட்டும் படம் பிடிக்க அனுமதிக்கிறீர்கள். எங்களுக்கு அனுமதி மறுக்கிறீர்களா, நான் ஓட்டு போடவில்லை எனக்கூறி  ஓட்டுப்போடாமல்  திரும்பிச் சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் புகார் செய்துவிட்டு வந்து மீண்டும் வாக்களிப்பேன் என கூறிவிட்டு குமார்  புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பூத்தில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!