Skip to content
Home » திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து  பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டனர்.  அதனை தொடர்ந்து 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

7-ம் திருநாளான நேற்று ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.  இந்த நிலையில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி திருப்பதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!