Skip to content
Home » கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50). இளநீர் வியாபாரியான இவர், கடந்த 18ம் தேதி முதல் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் ஏருக்காட்டூர் மதகு வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் கொரடாச்சேரி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், காணாமல் போன ராஜா தான் பிணமாக கிடக்கிறார் என்பதும், இவருக்கும், அதே ஊரை சேர்ந்த 40வயதான பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக தகாத உறவு இருந்ததும், இது தொடர்பாக இருவரையும் அவரது உறவினர்கள் பலமுறை கண்டித்ததும்,  தெரியவந்தது.

எருக்காட்டூர் பாசன வாய்க்கால் மதகு அருகே போதையில் நின்று கொண்டிருந்த ராஜாவை,  அதே பகுதியை சேர்ந்த வீரமணியும், அவரது மைத்துனர் சரவணன் (30) ஆகிய இருவரும் சேர்ந்து, அடித்து உதைத்து வாய்க்கால் மதகின் கீழே இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்ததது.பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!