Skip to content
Home » அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்8 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்அடையாளம் காணப்பட்டுள்ளார். 23 வயதான அவருடைய பெயர் ரோமியோ நான்ஸ். சிகப்பு கலர் டொயோட்டா காம்ரி காரில் தப்பியோடிவிட்டார். ஆயுதங்களுடன்  தப்பிய  அவர்ஆபத்தானவர் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். நான்ஸ் மற்றும் அவரது கார் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 875 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!