Skip to content
Home » தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை( சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ். காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருவையாறு மற்றும் மேலதிருப்பூந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, ஆவிக்கரை,தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழனம், அணைக்குடி, விளாங்குடி,புனவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளி ல்மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு மின்வாரியஉதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!