Skip to content
Home » வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. அமைச்சர் எம்.ஆர்.கே.

வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. அமைச்சர் எம்.ஆர்.கே.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  திருச்சியில் அளித்த பேட்டி:

காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழகத்தில் பரவாயில்லை. விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் தமிழக அரசு உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. சில காலங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்து விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

வருகிற 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் கேர் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த வேளாண் சங்கமம் விழாவை வருகிற 27-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிற்சிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது.

வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் சார்பாக பயிர் சம்பந்தமாக கருத்துகளை வழங்க இருக்கிறார்கள். வேளாண் வணிகம் சார்பாக கடந்த 10-ந்தேதி சென்னையில் மாபெரும் கண்காட்சி தொடங்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். திருச்சியில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!