மத்தியப்பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் ஓடை நீரில் கார் மூழ்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியது. இதில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர், காவல்துறையினர் சடலங்களாக மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
