Skip to content
Home » திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… போலீஸ் விசாரணை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பரக்கத் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கஜமித்ரா (16 ) இவர் துவாக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஜமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கஜமித்ரா இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!