Skip to content
Home » திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

திருச்சியில் பஸ் மோதி +2 மாணவி பலி…. போலீஸ் விசாரணை…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலசிந்தாமணி காவேரி நகரைச் சேர்ந்த ஜெயஜோதி என்ற பிளஸ் 2 பள்ளி மாணவி இன்று காலை திருச்சி சிந்தாமணி பஜாரில் அவரது அண்ணன் விஜயகுமாருடன் பள்ளிக்கு செல்லும் போது தனியார் பேருந்து மோதி நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த

ஏராளமானோர் சிந்தாமணி பஜார் சாலையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மனு எழுதி கொடுத்து விட்டு கலைந்து சென்றளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!