Skip to content
Home » திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி  எஸ்ஆர்எம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி சென்றனர்.  கன்னியாகுமரியில்  கணபதிபுரம் லெமூர் கடற்கரைக்கு சென்ற அவர்கள்  இன்று காலை  கடலில் இறங்கி குளித்தனர்.

10 பேர் குளித்தனர்.   அவர்கள் நீந்தியபடி கடலின் ஓரமான பகுதியில் தான் நின்று கொண்டிருந்தனர். . அப்போது  திடீரென வந்த ராட்சத  அலை 6 பேரை வாரி சுருட்டி இழுத்துச்சென்றது.  சிறிது நேரத்தில் 4 பேர் சடலமாக கரையில் ஒதுங்கினர்.  அவர்கள் விவரம் வருமாறு: பிரவின் சாம்,காயத்திரி,சாரு கவி.வெங்க டேஷ்.  இவர்களும் பயிற்சி மருத்துவர்கள். மற்ற இருவரையும் காப்பாற்றி  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆனது.  ஏற்கனவே  குமரி கடலில் ராட்சத அலை வீசும் என  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!