திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள் – சிக்னல்கள், ரயில் நிலையங்கள், கோவில் வாசல்கள் என பல்வேறு இடங்களில் ஆதரவின்றி சுற்றி திரியும் முதியவர்களை கனக்கெடுத்து அவர்களை காப்பகங்களில் சேர்க்க உத்தரவிட்டார். அந்த வகையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 30 போலீசார் நேற்று கண்டோன்மெண்ட்
ஒத்தக்கடை சந்திப்பு – ரயில்வே சந்திப்பு, தலைமை தபால் நிலையம் – காந்தி மார்க்கெட் உள்ளிட்ட திருச்சி மாநகர முழுவதும் பரவலாக இந்த மீட்பு குழு ஆய்வு செய்ததில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 நபர்களை மீட்டு அவர்களை திருச்சி மாநகரில் உள்ள மறுவாழ்வு காப்பங்களில் ஒப்படைத்தனர். திருச்சி மாநகரில் இது போன்ற ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை அவர்களுக்கான மறுவாழ்வுக்காக தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.