Skip to content
Home » திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

துபாயில் இருந்து நேற்று மாலைதிருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த  நாகப்பட்டினம் மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்( 42 )என்ற நபர் அந்த விமானத்தின்  பணிப்பெண்ணிடம்  தகராறு செய்து உள்ளார்.   அப்போது முத்துக்குமரன் மது போதையில் இருந்து உள்ளார்.   அவர் விமானப்பணிப்பெண்ணை  விமானத்துக்குள்  தள்ளிவிட்டார்.    விமானம் திருச்சி வந்தடைந்ததும் இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் ஸ்டேஷன் இன்சார்ஜ் மேனேஜர் ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமார் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!