சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த 2 செருப்புகளிலும் செருப்பை கிழித்து உள்ளே 3பாலிதீன் கவர்களில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த தங்கம் 401.5 கிராம் எடையுடள்ள 24 காரட் ஆகும்.இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 85ஆயிரத்து 179. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடா்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.