Skip to content
Home » திருச்சி பாஜ நிர்வாகி மீது பிடிவாரண்ட்…கோர்ட் உத்தரவு…

திருச்சி பாஜ நிர்வாகி மீது பிடிவாரண்ட்…கோர்ட் உத்தரவு…

  • by Senthil

2021 ம் ஆண்டு பதவி ஏற்று முதல்முறையாக அண்ணாமலை திருச்சி வந்தார். அவரை வரவேற்கும் விதமாக, போலீசார் எதிர்ப்பையும் மீறி, சரவெடிகளை வெடித்ததாக, பாஜக நிர்வாகி நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டது. திருச்சி அண்ணாசிலை ஸ்டேடியம் அருகில் பெட்ரோல் டேங்கர் வண்டி வரும் போது பட்டாசு வெடிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தும் அதனை மீறி பட்டாசு வெடித்தனர். இது தொடர்பாக தான் பாஜ நிர்வாகி நவநீதகிருஷ்ணன் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் பல முறை ஆஜராகாதால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!