Skip to content
Home » திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (40) கொத்தனார். இன்று காலை டூவீலரில் பழனிச்சாமி  திருச்சி-நாமக்கல் ரோட்டில்  சென்ற போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் வேகமமாக வந்த போது பழனிசாமி டூவீலர் மீது வேகமாக மோதியது. இதில் பழனிச்சாமி படுகாயமடைந்தார்.  நாமக்கல்லில் இருந்து திருச்சி வரும் பொழுது பழனிசாமி உறவினர்கள் ஆத்திரத்தில் அந்த தனியார் பஸ்சை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் எஸ்ஐகள் செந்தில்குமார்,  ஆறுமுகம், முருகேசன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் சம்பவம் நடந்த இடம் தொட்டியம் பகுதி என்பதால் தொட்டியம் காவல் நிலையத்தில் பேசி முடிவெடுக்க வேண்டும் என அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!