திருச்சி, காட்டூர் , பிலோமினாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் ( 50). இவர் நேற்று டூவீலரில் திருச்சி டி. வி. எஸ். டோல்கேட் மேம்பாலம் அருகில் பெட்ரோல் பங்க் அருகே தனது டூவீலரில் வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சண்முகத்தின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.