Skip to content
Home » திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து வரும்படி கூறி உள்ளனர். இதையடுத்து கடந்த 5-ந் தேதி அந்த சிறுமி புத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு பெற்றோருடன் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ரவி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் சிறுமியை ஸ்ரீரங்கம்அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் அழைத்து சென்று இது பற்றி கூறி உள்ளனர். இதையடுத்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் டாக்டர் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!